சித்ராவுக்கு ஹேம்நாத் செஞ்ச கொடுமையிலேயே இதுதான் உச்சம்.!

விஜே சித்ராவின் தற்கொலைக்கு பின்னால் பலர் இருக்கலாம் என்றாலும் ஹேம்நாத் செய்த கொடுமைகள் அதற்கு மேல் என தகவல்கள் கூறுகின்றன..


சின்னத்திரை நடிகை சித்ராவுடன் உல்லாசமாக இருந்துவிட்டு அவரது கற்பின் மேல் ஏற்பட்ட சந்தேகம்


ரேகா நாயர்

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு பின்னால் பலர் இருக்கலாம் என்ற வியூகங்கள் இருந்து வந்த நிலையில், இரண்டு வருடங்கள் கழித்து பலரது பெயர்கள் வெளிவர தொடங்கியுள்ளன… சித்ராவின் தோழி ரேகா நாயர், சித்ராவின் காதல் கணவர் ஹேம்நாத் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் என ஒரு சிலர் கொடுத்து வரும் பேட்டிகள் இந்த விவகாரத்தை சூடு பிடிக்க வைக்கின்றன…

சிரித்த முகம்

சித்ராவின் தற்கொலைக்கு பின்னால் இருந்தவர்கள் சிலர் அவரை பயன்படுத்திக்கொண்டதாகவும், மேலும் சித்ராவின் சில அந்தரங்கங்களை தெரிந்துகொண்டதால்தான் ஹேம்நாத்தை சித்ரா கூடவே வைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது… அதை ஆராய்வதற்கு முன்பு சில விஷயங்களை நாம் நினைவு கூற வேண்டும்… சிரித்த முகம், அனைவரிடம் சகஜமாக பழக்கூடிய சித்ரா ஹேம்நாத்தின் பிடியில் சிக்கி என்னென்ன சித்திரவதைகளை சந்தித்தார் என்பதை குறித்து ஹேம்நாத்தின் நெருங்கிய நண்பரான சையது ரோஹித் கூறியவை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது…

ரோஹித்

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்கும்போது, கதிருடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டாம் எனவும், முடிந்தவரை உடல் ரீதியான உரசல்களை தவிர்க்குமாறு ஹேமந்த் கேட்டுள்ளார். ஆனால், இந்த சீரியல் மூலமாகவே பிரபலமாகியுள்ள நான், திரைக்கதைகளில் எப்படி கண்டிப்புடன் நடந்து கொள்வது என்று வேதனை தெரிவித்துள்ளார்.

தினமும், ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வரும் சித்ராவிடம், என்னென்னெ மாதிரியான காட்சிகள் எடுக்கப்பட்டன என்பதை குறித்து ஹேமந்த் கேட்டு வந்துள்ளார். ஒருவேளை கதிருடன் (அந்த கணவன் கேரக்டர்) நெருக்கமாக காட்சிகளில் நடித்ததாக கூறினால், சைக்கோவாக மாறும் ஹேமந்த், சித்ராவை கடித்து, கழுத்தின் மீது ஏறி அமர்ந்து அழுத்துவது போன்ற கொடுமைகளை செய்ய தொடங்குவார் என சம்பவத்தை நேரில் பார்த்துள்ள ரோஹித் தெரிவித்துள்ளார்.

சந்தேகம்

மேலும், சித்ரா கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா என்ற சந்தேகம் ஹேமந்த்துக்கு பலமுறை எழுந்துள்ளது. அதனை உறுதி செய்துகொள்ள, மருத்துவரான ரோஹித்தின் மனைவியிடமும், வேறொரு மருத்துவரிடமும் சந்தேகங்களை கேட்டு வந்துள்ளார் ஹேமந்த். மேலும், ” நீ உண்மையாகவே பத்தினி என்றால் செத்து போ” என்று பலமுறை கூறி வந்துள்ளார் என ரோஹித் கூறியிருந்தார்…

வெர்ஜின் டெஸ்ட்

ஆனால், திருமணத்துக்கு முன்பும் அதற்கு பின்னரும் சித்ராவுடன் பல நாட்கள் ஒன்றாக தங்கி வந்த ஹேம்நாத் சித்ராவை உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பலமுறை உல்லாசமாக வாழ்ந்துவிட்டு கன்னித்தன்மை குறித்த சந்தேகத்தை எழுப்புவது வேடிக்கையான ஒன்று… அப்படி இருந்தும் கன்னித்தன்மை குறித்து மருத்துவ ஆலோசனைகளை கேட்ட ஹேம்நாத்தின் மனநிலை எந்த அளவுக்கு வக்கிரமாக இருந்திருக்கும் என்பதை சித்ராவின் ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவரது நண்பர் தரப்பு கூறுகிறது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!