நடிகை சித்ராவின் பிரேத பரிசோதனை பொய்யா..? அதிர்ச்சியாக வெளிவந்த தகவல்.!

சின்னத்திரை நடிகை சித்ராவின் பிரேத பரிசோதனை மீது பல சந்தேகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.


விஜே சித்ரா தற்கொலையில் பல மர்மங்கள் உள்ள நிலையில் சித்ராவின் உடலில் இருந்த காயங்கள் மேலும் பல சந்தேகங்களுக்கு வழி வகுக்கிறது.

சின்னத்திரை நடிகை விஜே சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த சம்பவத்தன்று காதலன் ஹேம்நாத் உடன் இருந்ததால் அவரை நோக்கி வழக்கு நகர்ந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் அவரை கைதும் செய்தனர்.

தற்போது ஹேம்நாத் ஜாமினில் உள்ளார். இந்நிலையில், தனது மகள் சைக்காலஜி படித்தவள் என்றும் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவள் கோழையல்ல என்றும் சித்ராவின் தாய் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்களும் கூறினர்… மேலும், சித்ராவை ஹேம்நாத் சித்ரவதை செய்து அடித்து கொலை செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சித்ராவின் தோழி ரேகா நாயர் பகிரங்கமாக குற்றசாட்டு வைத்துள்ளார். அதே சமயம், சித்ரா பல பேருடன் நெருங்கி பழகிய பெண் என்றும் வேறு சிலருக்கும் இந்த மரணத்தில் தொடர்பு உள்ளது என்றும் அவர் கூறி வருகிறார்.

பதட்டமாக இருந்த சித்ரா

சித்ராவின் வழக்கை பொறுத்தவரை அவரது பிரேத பரிசோதனை அறிக்கையானது பல வியூகங்களுக்கு முரணாகவே உள்ளது. அதுகுறித்து மேலும் பார்ப்போம்…

சம்பவம் நடந்த நாளன்று அந்த வில்லாவின் ஹாலில் சித்ராவும், ஹேம்நாத்தும் அமர்ந்து பேசியுள்ளனர். அப்போது, பதட்டமாக இருந்த சித்ரா குளித்துவிட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் வராததால் அந்த அறைக்கு ஹேம்நாத் சென்றுள்ளார். அப்போது, கதவு உள்பக்கமாக பூட்டி கிடந்துள்ளது. கதவை தட்டியும் சித்ராவிடம் இருந்து பதில் வராததால், வில்லாவில் இருந்த ஊழியர்களிடம் மாற்று சாவி வாங்கி வந்து திறந்துள்ளனர். அப்போது சித்ரா தூக்கில் பிணமாக கிடந்ததாக ஹேம்நாத் கூறுகிறார்.

பிரேத பரிசோதனை

பிறகு சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இரண்டு மருத்துவர் குழு முன்னிலையில் நடந்தது. அதில், சித்ரா தற்கொலை செய்துகொண்டது உறுதியானது. முக்கியமாக சித்ராவின் முகத்தில் இருந்த நக கீறல் அவருடைய நகத்தின் மூலம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்தது. அதுகுறித்து விளக்கிய மருத்துவர் ஒருவர், சித்ரா பின்பக்கமாக தூக்கு போட்டுள்ளார்… சுருக்கு விழுந்த பின்னர் அதை அவிழ்க்க சித்ரா முயற்சித்தபோது அவரது நகங்கள் முகத்தில் கீறி காயம் ஏற்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்தார்…

மறைக்கப்பட்ட காயம்

இந்த சூழலில்தான் சித்ராவின் தாய் அண்மையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.. அதில், சித்ராவின் கழுத்து பகுதியில் பல்லால் கடித்த அடையாளம் இருக்கிறது… அதை சூம் செய்து பார்த்த பிறகுதான் எங்களுக்கே தெரிய வந்தது என சித்ராவின் தாயார் கதறி அழுது விளக்கினார்… ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த பல் காயத்தை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

நண்பர் ரோகித்

மேலும், சித்ராவுடன் ஹேம்நாத் சண்டை போடும் போதெல்லாம் சித்ராவை அவன் கடித்து காயப்படுத்துவான் என ஹேம்நாத்தின் நண்பர் ரோகித் என்பவர் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்… அதை வைத்து பார்க்கும்போது சித்ரா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு ஏற்பட்ட சண்டையிலும் சித்ராவை ஹேம்நாத் கடுமையாக கடித்திருக்கலாம் என்றும் மன ரீதியாக திட்டி தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் என்றும் ஆழமான சந்தேகங்கள் எழுகின்றன… ஆனால், ஹேம்நாத் இதை மறைத்துவிட்டு தற்போது நல்லவர் போல மீடியா முன்பு பேசி வருவதாகவும், இவருக்கு பணம் கொடுத்தவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக 7 பேரை மாட்டிவிட முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!