சித்ராவுக்கும், ஹேமந்துக்கும் கல்யாணமே ஆகல… ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி பகீர்!

விஜே சித்ராவுக்கும் ஹேமந்த்துக்கும் கல்யாணமே ஆகல என ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மீண்டும் உயிர்பெறும் வழக்கு

விஜே சித்ரா மரணமடைந்து ஓராண்டு கடந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் அந்த வழக்கு உயிர் பெற்று வருகிறது. தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சித்ராவின் கணவர் ஹேமந்த் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் தூசு தட்டப்பட்டு வருகிறது.

அடித்து கொலை

சித்ரா மரணத்திற்கு காரணமானவர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சித்ரா ஹேமந்த் கூறியதை கேட்ட சித்ராவின் பெற்றோர், வழக்கை திசை திருப்ப ஹேமந்த் முயற்சிப்பதாக கூறியுள்ளனர். மேலும் சித்ரா மரணத்திற்கு ஹேமந்த்தான் காரணம் என்றும் அவர்தான் சித்ராவை அடித்து கொலை செய்து விட்டதாகவும் கூறி வருகின்றனர்.

ஓய்வுபெற்ற போலீஸ்

இந்நிலையில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான வரதராஜன் சித்ரா வழக்கு தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் ஹேமந்த் மற்றும் சித்ரா குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார். அதன்படி ஹேமந்துக்கும் சித்ராவுக்கும் திருமணமே நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.

திருமணமே நடக்கவில்லை

மேலும் சித்ராவை திருமணம் செய்யாமலேயே சூளைமேட்டில் உள்ள ஹோட்டலில் திருமணம் செய்ததாக சப் ரிஜிஸ்டரர் அலுவலகத்தில் ஹேமந்த் 15000 ரூபாய் பணம் கொடுத்து பதிவு செய்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். திருமணம் நடைபெற்றதாக ஹேமந்த் கொடுத்த சூளைமேடு ஹோட்டல் அட்ரஸில் அப்படி ஒரு ஹோட்டலே இல்லை. எல்லாமே பொய் என்றும் கூறியுள்ளார்.

5 மாதங்கள் ஆகிறது

சித்ராவுக்கும் ஹேமந்துக்கும் திருமணம் ஆகவில்லை என சித்ராவின் பெற்றோர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து 5 மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக மகளை இழந்த பெற்றோரை காவல் நிலையம், காவல் நிலையமாக அலைகழிக்கிறார்கள். கல்யாணம் ஆகவில்லை என்று நிரூபித்தால் சித்ராவின் சொத்துகள் அவருடைய அப்பா அம்மாவுக்கு போகும்.

போலீஸ் துணை போகிறது

புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத போலீஸ் அதிகாரிகள் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாகவும் தெரிவித்துள்ளார். ஹேமந்தின் மோசடி குற்றங்களுக்கு போலீஸ் துணை போகிறது என்றும் போலீஸால்தான் ஹேமந்த் தப்பித்து வருவதாகவும் ஓய்வு பெற்ற அதிகாரி வரதராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருமணம் ஆனதாக

நசரத்பேட்டையில் உள்ள ஹேட்டலில் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி விஜே சித்ரா சடலமாக மீட்கப்பட்டார். சித்ராவுக்கும் ஹேமந்துக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பதிவு திருமணம் நடைபெற்றதாகவும் இருவரும் 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் விமரிசையாக திருமணம் செய்து கொள்ள இருந்ததாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!