பூ வியாபாரம் செய்யும் மாணவிக்கு அமெரிக்காவில் ஆராய்ச்சி படிப்பு!

மும்பையில் பூ வியாபாரம் செய்து வந்த மாணவிக்கு, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலையில், பிஎச்.டி., எனப்படும் ஆராய்ச்சி படிப்பு படிக்க இடம் கிடைத்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர் சரிதா மாலி, ௨௮. இவரது தந்தை, சாலையோரத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே, பூக்களை மாலையாக கட்டி தந்தையுடன் சென்று வியாபாரம் செய்வது சரிதாவின் வேலையாக இருந்து வந்தது.

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்ற சரிதா, அதில் எம்.பில்., மற்றும் ஆராய்ச்சி படிப்பும் படித்து முடித்து உள்ளார். இந்நிலையில், சரிதா மாலிக்கு அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலையில், பிஎச்.டி., படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.இது பற்றி, சரிதா மாலி கூறியதாவது:என் வாழ்க்கையில், கஷ்டங்களை தான் அதிகம் சந்தித்துள்ளேன்.

சிறு வயதிலிருந்தே பூக்களுடன் தான் வாழ்ந்து வருகிறேன். பள்ளி மாணவியாக இருந்த போதிலிருந்து, தந்தைக்கு உதவியாக பூ வியாபாரம் செய்து வந்தேன்.நேரு பல்கலையில் பட்டப்படிப்பு சேர்ந்த பின், விடுமுறையில் வீட்டுக்கு வரும் போது, பூ வியாபாரத்தை தொடர்ந்தேன். எனக்கு இரண்டு மூத்த சகோதரிகள், இரண்டு தம்பிகள் உள்ளனர். என் படிப்புக்கு தந்தை எந்த தடையும் விதிக்கவில்லை.

இப்போது, அமெரிக்காவில் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் படித்து முடித்த பின், குடும்ப முன்னேற்றத்துக்காக பாடுபடுவேன்.இவ்வாறு, அவர் கூறினார்.-News & image Credit: dinamalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!