இதனால் தான் எனக்கு திருமணம் நடக்கவில்லை – கங்கனா ரனாவத் கவலை!

பிரபல நடிகை கங்கனா ரனாவத், தனக்கு திருமணம் நடைபெறாமல் இருப்பதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.

ஆண்களை அடிப்பேன் என்று பரவும் வதந்தியால் தனக்கு இதுவரை திருமணம் நடைபெறவில்லை என நடிகை கங்கனா ரனாவத் கவலை தெரிவித்துள்ளார். கங்கனா ரனாவத் ஆக்‌ஷன் நாயகியாக நடித்துள்ள தாகத் படம் வருகிற 20ம் தேதி வெளியாகிறது. நிகழ்ச்சி ஒன்றில் படம் குறித்து பேசிய போது, படத்தை போன்று நிஜத்திலும் நடந்துக்கொள்வீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த கங்கனா, நிஜத்தில் யாரை என்னால் அடிக்க முடியும், “இதுபோன்ற வதந்திகளால் தான் தனக்கு திருமணம் ஆகவில்லை” என சிரித்தப்படி பதிலளித்தார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!