15 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய 10 பேர் கும்பல்!

ஆந்திர மாநிலம் கடப்பாவில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 10 பேர் கொண்ட கும்பலில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 6 பேரை தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் இஸ்லாம்புரத்தை சேர்ந்த 15 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்தவர் செம்பு. இவர் அங்குள்ள டெக்கரேஷன் கடையில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் செம்பு சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். பின்னர் சிறுமியை மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளார்.

இதையடுத்து தனது செல்போனில் உள்ள வீடியோவை சிறுமியிடம் காட்டி நண்பர்களிடமும் உல்லாசமாக இருக்க வேண்டுமெனவும், இல்லையெனில் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டினார்.

அவனது மிரட்டலுக்கு பயந்த சிறுமி அவனது நண்பர்களிடமும் உல்லாசமாக இருக்க ஒப்புக்கொண்டார். இதையடுத்து தனது நண்பர்கள் பலரிடம் சிறுமியை உல்லாசமாக இருக்க வைத்துள்ளார். கடந்த 6 மாதங்களாக இந்த சம்பவம் நடந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 4ந்தேதி சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிறுமியை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அவரது தந்தை சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அப்போது சிறுமியை பரிசோதித்த டாக்டர் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை இதுகுறித்து பொதட்டூர் பேட்டை மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அவரது புகாரை பதிவு செய்யவில்லை. சிறுமி 3 மாத கர்ப்பமாக இருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் பரவியது.

இதுகுறித்து கடப்பா போலீஸ் சூப்பிரண்டு அன்பு ராஜனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பூஜிதா நியமிக்கப்பட்டு குற்றவாளிகள் 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 6 பேரை தேடி வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!