மத்திய பிரதேச மந்திரியின் 22 வயது மருமகள் விபரீதமுடிவு..!

மத்தியப்பிரதேச பள்ளிக் கல்வித்துறை மந்திரி இந்தர் சிங் பார்மரின் மருமகள் சவிதா பார்மர் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் பள்ளிக்கல்வித்துறை மந்திரியாக இருப்பவர் இந்தர் சிங் பார்மர் இவரது மருமகள் சவிதா பார்மர் நேற்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் ஷாஜாபூரில் வசித்து வரும் 22 வயதாகும் சவிதா பார்மர் மத்தியப்பிரதேச கல்வித்துறை மந்திரி இந்தர் சிங் பார்மரின் மகன் தேவ்ராஜ் சிங்கை மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று இவர் தனது வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்த தற்கொலைக்கு காரணம் குடும்ப பிரச்சினை தான் என்று கூறப்படுகிறது. இதைத்தவிர வேறு எதுவும் இதுவரை போலீசாரால் உறுதி செய்யப்படவில்லை.

இவரது சடலம் இன்று தடவியல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவையொட்டி விசாரணையை தீவிரப்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!