என் மகனா…. இப்படி செய்தான்..? கொலையாளியின் தந்தை கடும் அதிர்ச்சி!

மாமல்லபுரத்தைச் அடுத்த பேரூரில் வசித்து வரும் கிருஷ்ணாவின் 2 தங்கைகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

இரட்டை கொலை சம்பவத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள டிரைவர் கிருஷ்ணாவின் தந்தை லால் சர்மா கொலை பற்றி கேள்விப்பட்டதும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

எனது மகனா… இப்படி செய்து விட்டான் என்று கேட்டு லால்சர்மா கண்ணீர் வடித்துள்ளார். மாமல்லபுரம் பண்ணை வீட்டில் 20 ஆண்டுகளாக காவலாளியாக வேலை செய்துள்ளேன். அவர் எவ்வளவு நல்ல மனிதர்? என்று கூறி தொழில் அதிபர் ஸ்ரீகாந்துடனான பழைய நினைவுகளையும் லால் சர்மா வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த கொலையின் பின்னணியில் லால்சர்மா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எந்த தொடர்பும் இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மாமல்லபுரத்தைச் அடுத்த பேரூரில் வசித்து வரும் கிருஷ்ணாவின் 2 தங்கைகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது அவர்கள் கிருஷ்ணாவின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பது பற்றி பல்வேறு தகவல்களை கூறி உள்ளனர்.

இரட்டை கொலை தொடர்பாக கிருஷ்ணா, ரவிராய் இருவருக்கு மட்டுமே தொடர்பு உள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!