கல்யாணத்தன்று மறக்க முடியாத சிறந்த பரிசை மணமகளுக்கு அளித்த மணமகன்.!

திருமண நாளன்று வாழ்வில் மறக்க முடியாத சிறந்த பரிசை மணமகளுக்கு அளித்த மணமகனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

திருமண நாள் மணமகன், மணமகள் இருவரின் வாழ்வில் மறக்க முடியாத சிறந்த விசயங்களில் ஒன்றாக இருக்கும். அந்த நாளில் தனது குடும்பம் மற்றும் நண்பர்கள் சுற்றுச்சூழ இருக்க வேண்டும் என அனைவரும் விரும்புவது வழக்கம்.

பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இல்லாமல் நடைபெறும் திருமணம் பற்றி நினைத்து பார்ப்பது கடினம். இந்நிலையில், திருமண நாளன்று மணமகளுக்கு வாழ்வில் மறக்க முடியாத வகையில், ஆச்சரியமளிக்கும் சிறப்பு பரிசு அளித்த மணமகன் பற்றிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தனது திருமணத்திற்கு தன்னுடைய பெற்றோர் வரமுடியாது என மணமகள் நினைத்துள்ளார். ஆனால், அந்த சிறப்பு வாய்ந்த நாளில் மணமகளின் பெற்றோரை அவருடன் இருக்கும்படி உறுதி செய்து வருங்கால மணமகன் ஆச்சரியப்படுத்தி விட்டார்.

பிரேசிலில் இருந்து அவர்களை விமானத்தில்வரவழைத்து உள்ளார். சற்று தொலைவில் மறைவாக அவர்களை நிற்க வைத்து விட்டு மணமகளை மண்டபத்திற்கு வெளியே மணமகன் அழைத்து வருகிறார். அப்படி என்ன? தனக்கான பரிசு காத்திருக்கிறது என்ற வியப்பில் புன்முறுவலடன் வந்த மணமகள் பெற்றோரை பார்த்ததும் ஒரு கணம் உடைந்து போய்விட்டார்.

அப்படியே தரையில் அமர்ந்து அழுது விட்டார். பின்னர் எழுந்து ஓடி சென்று பெற்றோரை கட்டி தழுவி கொண்டார். 3 லட்சத்திற்கும் கூடுதலான பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட இந்த வீடியோ, மேட் மீ ஸ்மைல் என்ற தலைப்பில் பகிரப்பட்டு உள்ளது. திருமண நாளன்று இதனை விட மிக பெரிய பரிசு வேறெதனையும் அந்த மணமகள் பெற்று விட முடியாது.

இதற்கு பலரும் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு நல்ல கணவன் தனது மனைவியின் விருப்பத்திற்கு எப்போதும் முதல் இடம் தருபவன். அதற்கு ஈடாக மனைவியும் தனது கணவரை நினைப்பாள். இந்த திருமணத்திற்கு கடவுள் ஆசி வழங்கட்டும் என ஒருவர் தெரிவித்து உள்ளார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!