நடுரோட்டில் குழந்தைகள் முன் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்!

பெண்ணை கொலை செய்த குற்றவாளி தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

டெல்லியில் இளம்பெண் ஒருவர் அவரது குழந்தைகள் முன்பே குத்தி கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த குற்றவாளி தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் அளித்த விளக்கத்தில் கூறியதாவது:-

சாகர் போலிஸ் ஸ்டேஷனுக்கு பகல் 2 மணி அளவில் பிசிஆர் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பெண் ஒருவர் நடுரோட்டில் கத்திக்குத்து காயத்துடன் கிடந்ததாகவும், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்ததாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் மர்ம நபர் ஒருவர் அந்த பெண்ணை துரத்தி வந்து, அந்த பெண்ணின் குழந்தைகள் முன்பே கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடுகிறார். இதுகுறித்து விசாரித்ததில், கத்தியால் குத்திய நபர் அந்த பெண்ணின் வீட்டின் அருகில் இருந்தவர் என மட்டும் தெரிய வந்துள்ளது. கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!