கல்யாணத்திற்கு காற்றில் பறந்து வந்த மணப்பெண்..!

இத்தாலியில் நடைபெற்ற திருமணத்தில் மணமகள் திருமண அரங்கில் நுழைந்த விதம் அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது.

சமீப காலமாக திருமணம் நிகழ்ச்சிகள் பல்வேறு வித்தியாசமான முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இத்தாலியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமகள் திருமண அரங்கில் நுழைந்த விதம் அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது. சுமார் 250 ஹீலியம் பலூன்களை தன் உடலுடன் கட்டிக்கொண்டு காற்றில் பறந்து மிதந்தபடி அரங்கிற்குள் நுழைந்தார். இந்த வீடியோ 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் பலர் இதனை பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில், மணமகள், திருமண கவுன் அணிந்து, ஹீலியம் பலூன்களின் உதவியுடன் காற்றில் மிதப்பதைக் காணலாம். மணமகளின் அலங்காரத்துடன் ஒருங்கிணைக்க வெள்ளை நிறத்தில் ஆன பலூன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மணமகள் தனது திருமண அலங்காரத்துடன் வைரம் பதிக்கப்பட்ட தலைப்பாகையும் அணிந்திருக்கிறார். இது அனைவரின் கண்களுக்கும் விருந்தாக அமைந்தது. இதுக்குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!