விஷம் குடித்த நர்சு-மகள் சாவு – கணவரிடம் போலீஸ் தீவிர விசாரணை!

நெல்லையில் குடும்ப தகராறில் விஷம் குடித்த நர்சு, அவருடைய மகள் பரிதாபமாக இறந்தனர்.


நர்சு
நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி, காற்றாலை என்ஜினீயர். இவருடைய மனைவி சுமதி (வயது 38). இவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள்.


கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாடசாமி பணிக்கு சென்று விட்டார். மாலையில் வீடு திரும்பியபோது சுமதி, இளைய மகள் சுப ராஜேசுவரி (8) ஆகிய 2 பேரும் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.


2 பேர் பலி
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாடசாமி தனது மனைவி மற்றும் மகளை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு சிறுமி சுபராஜேசுவரி இறந்தாள். நேற்று அதிகாலை சுமதியும் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினார்கள். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த சுமதி, 2 குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருந்தார்.


போலீஸ் விசாரணை
இதில் மூத்த மகள் விஷம் குடிக்காமல் வெளியே ஓடிவிட்டாள். இதையடுத்து சுமதி, இளைய மகள் சுபராஜேசுவரிக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு, தானும் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.


மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சுமதியின் கணவர் மாடசாமி மற்றும் குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லையில் விஷம் குடித்த நர்சு, அவரது மகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!