நாட்டுப்புற கலைஞர் தங்கராசுவின் புதிய வீட்டை திறந்து வைத்த மாரி செல்வராஜ்!

புதிய வீட்டை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்னு மற்றும் இயக்குனார் மாரி செல்வராஜ் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தனர்.

பரியேறும் பெருமாள் படத்தில் நடித்தவரும், நாட்டுப்புற கலைஞருமான தங்கராசுவின் புதிய வீட்டை இயக்குனர் மாரி செல்வராஜ் திறந்துவைத்தார்.

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கதாநாயகனுக்கு அப்பாவாக நடித்து புகழ்பெற்ற தங்கராசுவின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் புதிய வீடு ஒன்றை கட்டிக்கொடுத்துள்ளது.

இந்த புதிய வீட்டை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்னு மற்றும் இயக்குனார் மாரி செல்வராஜ் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தனர். இதுபோன்ற நலிந்த கலைஞர்களுக்கு உதவ வேண்டும் என்று இயக்குனர் மாரி செல்வராஜ் கேட்டுக்கொண்டார்.News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!