3 மாத கர்ப்பிணி உடலில் தீ காயங்களுடன் பிணமாக மீட்பு..!

சாத்தூர் அருகே 3 மாத கர்ப்பிணி உடலில் தீ காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நல்லான்பட்டியை சேர்ந்தவர் முருகலட்சுமி (வயது 19). இவருக்கும் நாருகாபுரத்தை சேர்ந்த ஜான்பாண்டியன்(27) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

தற்போது கணவன் ஜான்பாண்டியன் உடன் தாராபுரத்தில் வசித்து வரும் முருகலட்சுமி 3 மாத கர்ப்பிணியாக இருந்து உள்ளார்

இந்த நிலையில் முருகலட்சுமி வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டில் தீப்பிடிப்பது கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்துள்ளனர். அப்போது வீட்டின் உள்ளே முருகலட்சுமி தீ காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

பின்னர், அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இருக்கன்குடி போலீசார் தீ காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இருந்த முருகலட்சுமியின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து முருகலட்சுமியின் தாயார் முருகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் இருக்கன்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!