போதை விருந்து – சினிமா பிரபலங்கள் உள்பட 144 பேர் சிக்கினர்!

ஹைதராபாத் நட்சத்திர ஓட்டலில் நடந்த போதை விருந்தில் கலந்து கொண்ட நடிகர் நடிகைகள் உள்பட 144 பேர் சிக்கினர்.

ஹைதராபாத் நட்சத்திர ஓட்டலில் நடந்த போதை விருந்தில் சிரஞ்சீவியின் தம்பி மகள், பிரபல திரைப்பட பாடகர் உட்பட 144 பேர் சிக்கினர்.

போதை விருந்து

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் ராடிசன் என்ற பெயரில் தனியார் 5 நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் போதை விருந்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் முதலில் அந்த ஓட்டலின் இமெயிலுக்கு தகவல் அனுப்ப வேண்டும். ஹோட்டல் தரப்பிலிருந்து அனுப்பப்படும் ஓ.டி.பி மூலம் எந்த மேஜை ஒதுக்கப்பட்டுள்ளது என அவர்களின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவார்கள். அந்த எஸ்.எம்.எஸ்-ஐ காட்டினால் மட்டுமே செக்யூரிட்டிகள் ஓட்டலுக்குள் அனுமதிப்பார்கள்

இந்த ஓட்டலில் நள்ளிரவு ஒரு மணி வரை மது விருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை ராடிசன் ஹோட்டலில் போதை விருந்து நடைபெறுவதாக ஐதராபாத் போலீஸ் கமிஷனர் ஜோயல் டேவிஷ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் ஏராளமானோர் ஓட்டலுக்குள் அதிரடியாக புகுந்தனர். அங்கு போதை விருந்தில் கலந்து கொண்ட 148 பேரை சுற்றி வளைத்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

சிக்கிய பிரபலங்கள்

விசாரணையில் ஆந்திரா மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, தம்பி நாக பாபுவின் மகள் நிகாரிகா, திரைப்பட பாடகர் ராகுல், முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ரேணுகா சவுத்ரி மகள், ஆந்திரா முன்னாள் டி.ஜி.பி மகள் மற்றும் முன்னாள் எம்.பியின் மகன் என விஐபியின் பிள்ளைகள் கலந்து கொண்டது தெரியவந்தது.

இவர்களுக்கு அந்த ஓட்டலில் பிரவுன் சுகர், கொகைன் உள்ளிட்ட போதைப் பொருள் சப்ளை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்வதற்காக 5 பாக்கெட்டுகளில் வைத்திருந்த 12 கிராம் எடையுள்ள கொகைன் பறிமுதல் செய்தனர்.

38 வி.ஐ.பி.யின் மகள்கள்

போலீசாரிடம் சிக்கிய நடிகை நிகாரிகா ஏராளமான தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடித்துள்ளார். தமிழில் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த போதை விருந்தில் 38 வி.ஐ.பி.க்களின் மகள்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி விட்டு மீண்டும் விசாரணைக்கு அழைக்கும் அழைக்கும்போது வரவேண்டுமென அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக ஹோட்டல் மேனேஜர்கள் அனில்குமார் ( 35 ), அபிஷேக் (39) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பஞ்சாரா ஹில்ஸ் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் சஸ்பெண்ட் செய்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!