இன்ஸ்டாகிராமில் கள்ள உறவு… 2 குழந்தைகளுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் மீட்பு!

வேடசந்தூரில் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான கள்ளக்காதலனுடன் இளம்பெண் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆர்.எச்.காலனியை சேர்ந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. 30 வயதான இளம்பெண்ணுக்கு 6 வயதில் மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் அந்த பெண் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த தொடங்கினார். அப்போது அதில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் இரவு பகலாக செல்போனில் பேசி வந்துள்ளனர்.

அந்த வாலிபர் இளம்பெண்ணை தனது ஊருக்கு வரும்படி அழைத்துள்ளார். இதனை நம்பி இளம்பெண் தனது 2 குழந்தைகளுடன் புனேவுக்கு ஓட்டம் பிடித்தார். மனைவி மற்றும் குழந்தைகள் மாயமானதால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடினார்.

இந்த நிலையில் புனே சென்ற இளம்பெண்ணின் குழந்தைகளை அந்த வாலிபர் கொடுமைப்படுத்த தொடங்கினார்.

இதனால் குழந்தைகள் மற்றொரு நபர் செல்போன் மூலம் தனது தந்தையை தொடர்பு கொண்டு கதறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வேடசந்தூர் போலீசில் புகார் அளித்தார். அவர்கள் புனே போலீசார் உதவியுடன் அங்கு முகாமிட்டனர்.

அப்போது வேடசந்தூரில் இருந்து சென்ற இளம்பெண் மற்றும் குழந்தைகள் இருக்கும் இடம் தெரிய வந்தது. அங்கு சென்றபோது கள்ளக்காதலன் தப்பி ஓடிவிட்டார். இளம்பெண் மற்றும் குழந்தைகளை போலீசார் மீட்டனர். போலீசாரிடம் இளம்பெண் தான் கணவருடன் செல்ல மாட்டேன் குழந்தைகளை வேண்டுமானால் அழைத்து செல்லுங்கள் என கூறி உள்ளார்.

கல்நெஞ்சம் படைத்த தாய்க்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் பெண் மற்றும் குழந்தைகளை கடத்தி சென்ற நபர் ஹபிபுல்லா (வயது28) என தெரிய வந்தது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!