வைரலான கவர்ச்சி புகைப்படம்… தத்துவம் பேசிய ரகுல் பிரீத் சிங்!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ரகுல் பிரீத் சிங், கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு தத்துவம் பேசியிருக்கிறார்.


தமிழில் அருண்விஜய் நடித்த ‘தடையற தாக்க’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். அதன்பின், கார்த்தி ஜோடியாக ‘தேவ்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, சூர்யாவின் ‘என்ஜிகே’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘அயலான்’ படத்தில் நடித்துள்ளார். இதுதவிர பாலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இவர் அடிக்கடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில், தற்போது புதிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ‘சிலர் நெருப்புக்கு அஞ்சுகிறார்கள், சிலர் நெருப்பாக மாறுகிறார்கள்’ என்ற தத்துவத்தை பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!