நயன்தாரா-விக்னேஷ் சிவன் மீது போலீஸில் பரபரப்பு புகார்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி பல திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார்கள். இந்த நிறுவனம் சார்ப்பில் வெளியான கூழாங்கல் என்ற திரைப்படம் பல விருதுகளை பெற்றது.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரெளடிகள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைப்பதா? என்றும் இது ரவுடிகளை ஊக்கப்படுத்தும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!