படுக்கைக்கு அழைத்த பேராசிரியர்… ‘மாஸ்டர்’ பட நடிகை நச் பதில்!

நடிகையை சௌந்தர்யாவிடம் பேராசிரியர் ஒருவர் படு ஆபாசமாக பேசியுள்ளது சோசியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவுகளாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் சௌந்தர்யா நந்தகுமார்.


இவர் 2010 ஆம் ஆண்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன்பின்னர் சின்னத்திரை சீரியல்களிலும், குறும்படங்களிலும் நடித்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘மாஸ்டர்’ படத்திலும் பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா, அடிக்கடி தன்னுடைய போட்டோஷுட் புகைப்படம், வீடியோக்களை பகிர்வது, ரசிகர்களுடன் உரையாடுவது என ஏதாவது ஒன்று செய்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவார். இந்நிலையில் சௌந்தர்யா பதிவிட்டுள்ள போஸ்ட் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது சமூக வலைத்தளத்தில் இவரிடம் மதுரையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் ஆபாசமாக கேள்வி எழுப்பியிருந்தார். குறிப்பாக படுக்கைக்கு வந்தால் எவ்வளவு வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார் சௌந்தர்யா. இவரிடம் படிக்கும் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார். நடிகை செளந்தர்யா பதிவை தொடர்ந்து அந்தப் பேராசிரியருக்கு சோசியல் மீடியாவில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.- source: samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!