இரையாக குழந்தையை தூக்கி சென்ற கழுகு… வைரலாகும் வீடியோ!

கழுகு ஒன்று இரையாக குழந்தையை தூக்கி செல்ல முயன்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது.


பார்க்கில் தனியாக இருந்த குழந்தையை தூக்கிசெல்லமுயற்சி
சிறிது தூரம் பறந்ததும் எடை அதிகமாக இருந்ததால் கீழே போட்டு சென்றது.

ஒருவருக்கு கூர்மையான கண்கள் இருந்தால் அவருக்கு கழுகு பார்வை என நாம் சொல்வோம் அதற்கு முக்கியமான காரணம் கழுகு 500 அடி உயரத்தில் பறந்தாலும் தரையில் கிடக்கும் தன் இரையை சரியாக பார்த்து அதை மேலிருந்து கீழே வந்து கொத்தி திங்கும். இப்படிப்பட்ட பார்வை கழுகுக்கு இருப்பதால் நாம் அப்படி சொல்கிறோம். ஆனால் கழுகு ஒரு குழந்தையை தூங்கி பறந்து செல்ல முயன்றது என சொன்னால் நம் மாட்டீர்கள் ஆனால் நீங்கள் இந்த செய்திக்கு மேலே உள்ள புகைப்படத்தை பார்த்து இது ஏதோ கிராபிக்ஸ் என நினைத்திருக்கலாம் ஆனால் இப்படியாக ஒரு சம்பவம் உண்மையிலேயே நடந்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் nature27_12 என்ற பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் ஒரு பார்க்கில் தன் குழந்தையுடன் வந்த தந்தை குழந்தையை பார்க்கில் அமர வைத்து விட்டு அவர் கொண்டு வந்த பேக்கில் தான் கொண்டு வந்த ஏதோ பொருளை எடுக்க சென்றிருந்தார். அப்பொழுது அவர் குழந்தையை தனியாக விட்டிருந்தார்.

இந்த நேரம் பார்த்து அங்கு வந்த கழுகு குழந்தையை தூக்கி செல்ல முயன்று குழந்தையை ஆடையை தன் காலால் கொத்தி தூக்கி சென்றது. குழந்தையை சற்று உயரத்திற்கு கொண்டு சென்ற பின்பு குழந்தையை எடை தாங்க முடியாமல் கீழே போட்டுள்ளது.

முதலில் இதை கவனிக்காத அந்த தந்தை குழந்தையை கழுகு சற்று உயரத்திற்கு கொண்டு சென்ற பின்பு தான் கவனித்தார். பின்னர் குழந்தை எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததும் குழந்தை தூக்கி குழந்தைக்கு ஏதேனும் அடிபட்டுள்ளதா என பார்த்துள்ளார்.- source: samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!