சிம்பு பற்றி சர்ச்சையாக பேசி வம்பில் சிக்கிய அனிதா… கொந்தளிக்கும் ரசிகர்கள்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் சிம்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அனிதா கூறிய ஒரு கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 14 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. கமல்ஹாசனை அடுத்து சிம்பு இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார் என்றும், இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான பாணியில் அவர் போட்டியாளர்களை அன்புடன் அரவணைத்து, அதே நேரத்தில் கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து தொகுத்து வழங்கி வருவதாக கருத்துக்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் சிம்பு குறித்து சுருதியுடன் அனிதா பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அனிதா, “நீ பேசுனது ரொம்ப ஆழமான விஷயம் இதெல்லாம் சிம்புவுக்கு புரியாது. அவர் அதுபற்றி யோசிக்கவும் மாட்டார். ஏன்னா அவர் பிக்பாஸுக்கு புதுசு. கமல் சாருக்கு இதெல்லாம் புரிஞ்சிருக்கும். அவர் 5 சீசன் ஹோஸ்ட் பண்ணி இருக்கார்’ என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சிம்பு ரசிகர்களிடயே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். இதனால் இந்த வாரம் அனிதாவை வெளியேற்ற வேண்டும் என்று சிம்பு ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

இதேபோன்று தான் கடந்த சீசனில் ஆரியை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அனிதாவை அதற்கு அடுத்த வாரமே ரசிகர்கள் வெளியேற்றினார்கள். அதே போல் தற்போது சிம்புவை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை கூறிய அனிதாவை இந்த வாரம் வெளியேற்றுவார்களா? என்ற கேள்வி எழும்பியுள்ளது.- source: malaimurasu * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!