பாலாவின் மனைவி அடிக்கடி டெல்லியில் தங்கினார்… பிரபல தயாரிப்பாளர் பகீர்!

இயக்குநர் பாலாவின் மனைவி இளம் எம்பி ஒருவருடன் அடிக்கடி டெல்லிக்கு சென்று தங்கியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


இயக்குநர் பாலாவின் மனைவி தடம் மாறியது குறித்துப் பேசி ஆதங்கப்பட்டுள்ளார் பிரபல தயாரிப்பாளரான கே ராஜன்.


அடுத்தடுத்து விவாகரத்து

இயக்குநர் பாலாவும் முத்துமலரும் கடந்த 5 ஆம் தேதி சட்டப்படி விவகாரத்து பெற்றனர். நான்கு ஆண்டுகளாக பிரிந்து இருந்த அவர்கள் தற்போது சட்டப்படி விவாகரத்து பெற்றுள்ளனர். சமந்தா- நாக சைதன்யா, இமான் , தனுஷ் – ஐஸ்வர்யா என அடுத்தடுத்து விவாகரத்தை அறிவித்தனர்.

தயாரிப்பாளர் கருத்து

அந்த அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில் தற்போது இயக்குநர் பாலாவும் அவரது மனைவி முத்து மலரும் விவாகரத்து அறிவித்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் விவாகரத்து குறித்து பிரபல தயாரிப்பாளரான கே ராஜன் நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.

அடிக்கடி டெல்லிக்கு..

அவர் பேசியிருப்பதாவது, நெட்டில் பார்த்து லவ் பண்றாங்க.. பழகுறாங்க, கல்யாணம் பண்ணிக்கிறாங்க. 17 வருஷம் வாழ்ந்துட்டு 18 வது வருஷம் குழந்தை பிறந்த பிறகு பிரிகிறார்கள். பாலாவின் மனைவி அடிக்கடி எம்பி ஒருவருடன் டெல்லிக்கு சென்று அவருடன் தங்கியிருக்கிறார். காலேஜ்ஜில் ஒன்றாக படித்தப்போது இருவருக்கும் பழக்கமாம்.

மன உளைச்சல்

இதனால் இயக்குநர் பாலா 4,5 வருஷமாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இது தவறான விஷயம். பாலா நல்ல சிந்தனையாளர். அவருடைய படம் வித்தியாசமாக இருக்கும். அவருக்கு 17 வருஷத்துக்கு பிறகு வலியை கொடுக்கிறாங்க. தாய்க்குலங்கள் அப்படி பண்ணக்கூடாது. இன்னைக்கு குடும்பங்கள் வாழ்வதே தாய்க்குலங்களால்தான். குழந்தைகளை பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை.

பாலாவை பாதிக்கும்

சினிமாவில் இப்போதுதான் இப்படி நடக்கிறது. அதை பெரிது படுத்துகிறார்கள். இந்த விஷயம் பாலாவை பெரிதும் பாதிக்கும். பாலு மகேந்திராவின் சிஷ்யன். தாய்க்குலங்களுக்கு குழந்தைகள் பிறந்த பிறகும் இப்படி ஒரு எண்ணம் வருகிறது என்று தெரியவில்லை. ஆம்பளைங்க போறாங்க.. ஆனா குடும்பத்த காப்பாத்துறது பெண்கள் தான். அவர்களில் ஒரு சிலர் இப்படி இருக்கிறார்கள்.. என்று ஆதங்கப்பட்டுள்ளார் தயாரிப்பாளர் கே ராஜன்.- source: samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!