14-வது மாடியில் இருந்து அலறியபடி குதித்து பெண் டாக்டர் விபரீதமுடிவு!

கொச்சி அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடியில் இருந்து குதித்து பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளா மாநிலம் கொச்சியை அடுத்த புல்லாடு பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் இப்ராகிம்.

ஜார்ஜ் ஆபிரகாமின் மகள் ரேஷ்மா ஆன் ஆபிரகாம். டாக்டரான இவர் கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பணி புரிந்து வந்தார்.

இதற்காக அவர் கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடியில் வசித்து வந்தார்.

டாக்டர் ரேஷ்மா ஆன் ஆபிரகாம் நேற்று வீட்டில் தனியாக இருந்தார். மாலையில் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்ற ரேஷ்மா ஆன் ஆபிரகாம், திடீரென 14-வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து பிளாட்களில் வசித்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் குடியிருப்பின் தரை தளத்தில் ரேஷ்மா ஆன் ஆபிரகாம் உடல் சிதறி இறந்து கிடப்பதை கண்டனர்.

அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது பற்றி கொச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ரேஷ்மா ஆன் ஆபிரகாம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!