போராட தயாராக இருக்கிறோம் – துப்பாக்கி ஏந்திய உக்ரைன் பெண் எம்.பி ஆவேசம்!

உக்ரைன் பெண் எம்.பி ருடிக் கலாஷ்னிகோவ் துப்பாக்கியுடன் போஸ் கொடுக்கும் புகைப்படம் டுவிட்டரில் வைரலானது.

உக்ரைனுக்குள் நுழைந்துள்ள ரஷியப் படைகள், கீவ் நகரைக் கைப்பற்ற முன்னேறி வருகின்றன. உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 3வது நாளாக தீவிரமடைந்துள்ளது. பொருளாதாரத் தடைகளைத் தாண்டி உலக நாடுகள் ஏதேனும் செய்ய வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே, உக்ரைன் எம்.பி. கிரா ருடிக் கலாஷ்னிகோவ் கூறும் போது, “ஒவ்வொரு உக்ரைனிய ஆணும், பெண்ணும் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, படையெடுக்கும் ரஷிய படைகளுக்கு எதிராக போராட தயாராக இருக்கிறோம்” என கூறினார். மேலும், ருடிக் கலாஷ்னிகோவ் துப்பாக்கியுடன் போஸ் கொடுக்கும் புகைப்படம் டுவிட்டரில் வைரலானது.

“நாங்கள் போரை ஆரம்பித்தவர்கள் அல்ல.நாங்கள் ஒரு அமைதியான நாடு, ஆனால் அவர்கள் சண்டைக்கு வருகிறார்கள். அதனால் தான் ஆயுதம் ஏந்துகிறோம்; என்னை போன்றவர்கள் இவ்வாறு செய்கிறோம்.

நாங்கள் போராடத் தயாராக இருக்கிறோம், மற்றவர்களை வென்று கைப்பற்றுவதற்காக அல்ல. ஆனால் நம்முடையதை, நமது சுதந்திரத்தை, நம் மக்களை, நம் தேசத்தை பாதுகாப்பதற்காக” என்று தெரிவித்தார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!