மகளை பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைக்கும் போது கட்டிப்பிடித்து அழும் தந்தை.!

ரஷியாவுடனான போருக்கு மத்தியில் உக்ரைனில் தந்தை ஒருவர் தனது மகளைக் கட்டிப்பிடித்து அழும் வீடியோ ஒன்று பரவலாகப் பரவி வருகிறது.

உக்ரைனில் 2-வது நாளாக தொடர்ந்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என இதுரை 137 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனில் போர் நடைபெற்று வருவதால் தனது மகளை பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைத்து தந்தை அழும் வீடியோ வைரலாகி வருகிறது.

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகளை ரஷியபடைகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பும் போது இருவரும் அழும் வீடியோ ஒன்று பார்ப்பர்வர்களின் மனதை நொறுங்கும் வகையில் உள்ளது. இந்த வீடியோவில் பிங்க் நிற ஜாக்கெட்டை அணிந்திருக்கும் சிறுமியை தனது தந்தையை கட்டிப்பிடித்த அழும் வீடியோ வைரலாகி உள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!