டிக்டாக் ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!

ரவுடி பேபி சூர்யா மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்ததையடுத்து அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

மதுரையை சேர்ந்தவர் சுப்புலட்சுமி என்ற சூர்யா(வயது35). இவர் ரவுடி பேபி என்ற பெயரில் டிக்டாக் செய்து பிரபலமானவர். இவரது நண்பர் மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சிக்கந்தர்ஷா என்ற சிக்கா(45).

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரவுடி பேபி சூர்யாவும், அவரது ஆண் நண்பரும் சேர்ந்து கோவை பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடத்தி வரும் யூடியூப் சேனல் நிகழ்ச்சி, தொடர்பாக அந்த பெண்ணை தகாத முறையில் விமர்சித்தனர். தொடர்ந்து அந்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து அந்த பெண், தனது கணவருடன் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மதுரையில் பதுங்கி இருந்த ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கந்தரை கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் 2 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே இந்த வழக்கில் கைதான சிக்கந்தர்ஷாவை ஏற்கனவே போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

அவரை தொடர்ந்து, ரவுடி பேபி சூர்யா மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம், மாவட்ட கலெக்டர் சமீரனுக்கு பரிந்துரை செய்தார்.

மனுவை ஆராய்ந்த கலெக்டர் சமீரன், ரவுடி பேபி சூர்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதற்கான நகலும் சிறையில் உள்ள ரவுடி பேபி சூர்யாவிடம் போலீசார் கொடுத்தனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!