பேஸ்புக் காதலனை கரம் பிடித்த இலங்கை பெண் – கடல் கடந்து மலர்ந்த காதல்!

சேலத்தை சேர்ந்த வாலிபரை பேஸ்புக் காதல் மூலம் இலங்கை பெண் கரம் பிடித்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த சரவணன் என்பவரும் இலங்கை பருத்தித்துறையை சேர்ந்த நிஷாந்தினி என்பவரும் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் காதலனை கரம் பிடிப்பதற்காக நிஷாந்தினி, 2 வாரங்களுக்கு முன்பு டூரிஸ்ட் விசாவில் சேலம் வந்துள்ளார். பின்னர் இருவரும் ஓமலூர் அருகே பஞ்சுகாளிப்பட்டியில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

தொடர்ந்து அவர்களது திருமணத்தை பதிவு செய்ய இருவரும் அரசு அலுவலகத்தை நாடிய போது திருமணத்தை பதிவு செய்வதில் சட்ட சிக்கல் இருப்பதால் தடையில்லா சான்று கேட்டு அதிகாரிகள் திருப்பி அனுப்பி உள்ளனர்.

இதனால் செய்வதறியாது திணறிய காதல் ஜோடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

தொடர்ந்து விசா காலம் விரைவில் முடிவடைவதால் காதலனை கரம் பிடித்த போதும் சேர்ந்து வாழ முடியாமல் அந்த பெண் திணறி வருகிறார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!