பெண் வனக்காவலரை கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலன்!

போடியில் பெண் வனக்காவலரை கழுத்தை நெரித்துக் கொன்ற கள்ளக்காதலன் மதுரை போலீசில் சரணடைந்தார்.

மதுரையைச் சேர்ந்தவர் பொன்னுப்பாண்டி மனைவி சரண்யா (வயது 27). இவர் தேனி சரக வனத்துறையில் காவலராக பணியாற்றி வந்தார். கணவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் போடி தென்றல் நகரில் 2 மகள்களுடன் வசித்து வந்தார்.

இவருக்கும் மதுரை சிறப்பு பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் திருமுருகன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இவர்கள் தனிமையில் சந்தித்து வந்தனர். திருமுருகனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சரண்யாவை பார்ப்பதற்காக நேற்று இரவு திருமுருகன் போடிக்கு வந்தார். அவர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த திருமுருகன் சரண்யாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து வெளியேறி மதுரை கீரத்துறை போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவர் போலீசாரிடம் பெண் வனக்காவலரை கொலை செய்தது குறித்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மதுரை போலீசார் போடி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று திருமுருகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!