மலேசியாவில் நடிகை அமலாபாலுக்கு இப்படி ஒரு நிலைமையா..? தொழிலதிபர் அதிரடியாக கைது..!


நடிகை அமலாபாலுக்கு பாலியல் ெதால்லை கொடுத்த தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர். ‘மைனா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். இவர், தலைவா, வேலையில்லாத பட்டதாரி, திருட்டு பயலே 2 உட்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இதுதவிர மலையாளம், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிபடங்களில் நடித்துள்ளார். இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால் கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றார். இந்த நிலையில், தற்போது தனியாக வசித்து வரும் அமலாபால் பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், பிப்ரவரி 3ம் தேதி மலேசியாவில் நடைபெறும் பெண்களுக்கான கலை நிகழ்ச்சி ஒன்றில் நடிகை அமலா பால் கலந்து கொண்டு ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுகிறார். இதற்காக, தி.நகரில் உள்ள நடன இயக்குனர் தரின் நடன பள்ளியில் அமலாபால் 3 நாட்களாக ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை ஒத்திகையில் கலந்து கொள்வதற்காக அமலாபால் சென்றுள்ளார். அப்போது, நடன பள்ளியில் இருந்த கொட்டிவாக்கத்தை சேர்ந்த ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வரும் தொழிலதிபர் அழகேசன் என்பவர் நடிகை அமலபாலிடம் செல்பி எடுக்க விரும்புவதாக கூறி அவரை அணுகியுள்ளார். அதற்கு நடிகை அமலாபால் மறுப்பு தெரிவித்துள்ளார்.


அப்போது, அந்த தொழிலதிபர் அமலபாலிடம் மலேசியாவில் என்னுடன் இரவு விருந்து சாப்பிட வருகிறாயா என்று கூறி கேட்டுள்ளார். இதற்கு, அமலாபால் அவரிடம் எதுவும் பேசாமல் இருந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அழகேசன் தகாத வார்த்தையில் அமலாபாலை திட்டியுள்ளார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது, அழகேசன் அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை சற்றும் எதிர்பாராத நடிகை அமலாபால் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அந்த நடன ஒத்திகையில் இருந்து உடனடியாக வெளியே வந்தார். பின்னர், நடிகை அமலாபால் தி.நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் அழகேசனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அமலபாலை அவர் தரக்குறைவாக பேசியதும், அவரிடம் தவறாக நடக்க முயற்சித்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அழகேசனை கைது செய்தனர். இது குறித்து, நடிகை அமலாபால் கூறும்போது, ‘மலேசியாவில் நடக்கும் நிகழ்ச்சிக்காக தி.நகரில் உள்ள தர் நடன ஸ்டுடியோவில் டான்ஸ் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறேன். இந்த நிலையில், நான் தனியாக இருக்கும் போது அழகேசன் எனது அறைக்கு வந்தார். பாலியல் ரீதியாக என்னிடம் அவர் தவறாக பேசினார். இதனால், அங்கு எனக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதாக உணர்ந்தேன்.நான் சுதந்திரமாக தனியாக வேலை செய்து வருகிறேன். இதனால் தான் உடனடியாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ேதன். ஒரு பெண்ணுக்கு இப்படி நடக்கும் போது விட்டு விடக்கூடாது. என்னை மாதிரி சுதந்திரமாக ேவலை செய்யும் பெண்கள் உள்ளனர். என்னை போன்று யாருக்கும் இந்த பிரச்னை வரக்கூடாது என்பதற்காக புகார் அளித்தேன்’ என்றார்.-Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!