சருமத்திலுள்ள கருமை நீங்க சூப்பர் டிப்ஸ் இதோ!

சிலருக்கு முகத்தில் வாய் மற்றும் நெற்றிப் பகுதிகளில் உள்ள சருமம் முகத்தில் உள்ள மற்ற பகுதியை விட கருமையாக காணப்படும். இதை போக்குவதற்கு கீழ்காணும் வழிமுறைகளை மேற்கொள்ளலாம்.

சிலருக்கு முகத்தில் வாய் மற்றும் நெற்றிப் பகுதிகளில் உள்ள சருமம் முகத்தில் உள்ள மற்ற பகுதியை விட கருமையாக காணப்படும். ஹார்மோன்களின் சீரற்ற சுரப்பு மற்றும் ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருட்களின் விளைவால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதை போக்குவதற்கு கீழ்காணும் வழிமுறைகளை மேற்கொள்ளலாம்.

ஒரு துண்டு இஞ்சி மற்றும் 10 புதினா இலைகள் சேர்த்து உரலில் நன்றாக இடித்து சாறு எடுத்து கொள்ளவும். அதனுடன் அரை மூடி எலுமிச்சைபழத்தை சாறு பிழிந்து சேர்க்கவும். இந்த கலவையை 2 அல்லது 3 டம்ளர் வெதுவெதுப்பான நீருடன் கலந்து தேவைப்பட்டால் சுவைக்காக சிறிது தேன் சேர்த்து தினசரி காலையில் தேநீருக்கு பதிலாக பருகவும். இதன் மூலம் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறி ஹார்மோன்கள் சீராக சுரக்கும்.

2 தேக்கரண்டி தயிர், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி அரிசி மாவு, 1 தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து நன்றாக கலந்து அதை கருமை படர்ந்த பகுதிகளில் பூசவும்.

மேற்கூறிய 2 முறைகளையும் தொடர்ந்து 20 நாட்கள் செய்து வந்தால் சருமத்தின் கருமை நீங்கி பொலிவு அதிகரிக்கும்.

ரசாயனம் கலக்காத சந்தனத்தூள், அரிசி கழுவிய தண்ணீர் இரண்டையும் சம அளவு கலந்து கருமை படர்ந்திருக்கும் இடங்களில் நாளொன்றுக்கு 2 முறை வீதம் தொடர்ந்து 2 வாரங்கள் தடவி வந்தால் கருமை நீங்கி சருமம் பளிச்சிடும்.

சாதம் வடித்த கஞ்சி 2 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி, வெண்ணெய் அரை தேக்கரண்டி இந்த மூன்றையும் கலந்து கருமை பாதித்த இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். வாரத்தில் 3 முறை தொடர்ந்து 3 வாரங்கள் செய்தால் கருமை மறைந்து சருமம் மினுமினுக்கும்.

கருமை பாதித்த பகுதியில் வெதுவெதுப்பான நீரைக்கொண்டு சுத்தம் செய்த பின்பு உருளைக்கிழங்கு சாறு 2 தேக்கரண்டி, தேன் அரை தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் கால் தேக்கரண்டி எலுமிச்சை சாறு 4 சொட்டு இவை அனைத்தையும் நன்றாக கலந்து சருமத்தில் கருப்பு திட்டுக்கள் இருக்கும் இடத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் நெற்றி மற்றும் வாயை சுற்றிலும் உள்ள கருமை முற்றிலுமாக நீங்கும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!