ஜல்லிக்கட்டை பார்க்க ஹெலிகாப்டரில் வந்த தொழில் அதிபர்!

ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசிக்கும் தர்மபுரி மாவட்டம் பொம்ம அள்ளி கிராமத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் பாபு குடும்பத்தினருடன் பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டரில் வந்தார்.

தர்மபுரி அருகே தடங்கத்தில் ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் அடக்கினார்கள். மாடுகள் முட்டியதில் 8 பேர் காயம் அடைந்தனர்.

இதனை பார்ப்பதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசிக்கும் தர்மபுரி மாவட்டம் பொம்ம அள்ளி கிராமத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் பாபு குடும்பத்தினருடன் பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டரில் வந்தார். ஜல்லிக்கட்டு நடந்த மைதானத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த இறங்குதளத்தில் (ஹெலிபேடு) அந்த ஹெலிகாப்டர் தரை இறங்கியது. அவரை ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள் வரவேற்றனர். அப்போது ஜல்லிக்கட்டுக்கு வந்த பொதுமக்கள் அந்த ஹெலிகாப்டரை சுற்றி நின்று செல்போனில் படம் எடுத்து மகிழ்ந்தனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!