திருமணத்தன்று மகள்களின் சிறுவயது ஆசையை நிறைவேற்றிய தந்தை!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் கேதர், இவர் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள்.

இவரது இரண்டு மகள்களையும் டாக்டருக்கு படிக்க வைத்து இருவரையும் ஆயுர்வேத டாக்டராக்கியுள்ளார். இவரது மகன் சட்டம் பயின்று வருகிறார். இந்நிலையில் இவர்களது இரண்டு மகள்களுக்கும் ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும் என்ற விருப்பம் சிறு வயது முதலே இருந்துள்ளது. ஆனால் பொருளாதார வசதி காரணமாக இது நடக்கவில்லை.

இந்நிலையில் தன் மகள்கள் பூனம் கேதர், பிரியங்கா கேதர் இருவருக்கும் ஒரே நேரத்தில் திருமண ஏற்பாடுகளை சுரேஷ் கேதர் செய்தார்.

இந்நிலையில் திருமணம் முடித்து தன் மணமகன் வீட்டிற்கு செல்லும் போது தனது மகள்களை ஆசையை நிறைவேற்றும் வகையில் அவர்களை ஹெலிகாப்டரில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி அவர்கள் திருமணம் முடித்துவிட்டு தங்கள் கணவர் வீட்டிற்கு ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர். இவர்கள் செல்வதை ஊரே ஒன்று கூடி வேடிக்கை பார்த்தனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!