அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சரோஜா மீது ஊழல் புகார் கூறிய அதிகாரி திடீர் மரணம்!

முன்னாள் அமைச்சர் சரோஜா மீது ஊழல் புகார் கூறிய உறவினர் ஒருவர் திடீரென உடல் நலமின்றி இறந்த சம்பவம் ராசிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் குணசீலன் (வயது 68). இவர் வீட்டு வசதி சங்க மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். மேலும் இவர், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் டாக்டர் சரோஜாவின் மூத்த அண்ணனின் மருமகன் ஆவார்.

இந்த நிலையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சரோஜா அமைச்சராக இருந்தபோது சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறியதின் பேரில் 15 பேரிடம் 76½ லட்சம் பணத்தை வாங்கி கொடுத்ததாகவும், ஆனால் முன்னாள் அமைச்சர் சரோஜா வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி விட்டதாகவும் அவர் மீதும், அவரது கணவர் லோகரஞ்சன் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி குணசீலன் போலீசில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சரோஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு கேட்டும், வழக்கை தள்ளுபடி செய்ய கோரியும் முறையிட்டுள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மீது ஊழல் புகார் கூறிய குணசீலன் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து தொடர்ந்து குணசீலன் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலையில் அவர் உயிரிழந்தார்.

தற்போது குணசீலன் தி.மு.க.வில் இருந்து வந்தார். அவர் உயிரிழந்த சம்பவம் தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் அமைச்சர் சரோஜா மீது ஊழல் புகார் கூறிய உறவினர் ஒருவர் திடீரென உடல் நலமின்றி இறந்த சம்பவம் ராசிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!