பால்கனியிலிருந்து குதித்து என்ஜினீயர் விபரீத முடிவு.!

அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 5-வது மாடியில் இருந்து குதித்து கப்பல் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் வெங்கடேசன் (வயது 57). கடல்சார் துறையில் பட்டப்படிப்பில் என்ஜினீயரிங் முடித்த இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

கடந்த சில நாட்களாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த வெங்கடேசன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று அதிகாலை 5-வது தளத்தில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்தார்.

இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் வெங்கடேசனை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட வெங்கடேசனுக்கு சுனிதா (54) என்ற மனைவியும், சித்தார்த் (16) என்ற மகனும். வர்ஷா (15) என்ற மகளும் உள்ளனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!