2 வயது மகனுடன் வாலிபர் விபத்தில் சாவு.. உயிர் தப்பிய மனைவி!

காவேரிபட்டணம் அருகே 2 வயது மகனுடன் வாலிபர் விபத்தில் பலியானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் தேவர் குளம் அருகே ஊத்து பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 28). இவர் ஓசூரில் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரோகிணி (25). இவர்களது மகன் மிதுன் (2).

இந்த நிலையில் நேற்று பெரியசாமி மனைவி, குழந்தையுடன் மோட் டார் சைக்கிளில் காவே ரிப் பட்டினம் சென்று கொண் டிருந்தனர். தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பையூர் பஸ் நிறுத்தம் அருகில் வந்தபோது சாலையோரம் நிறுத்தப் பட்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்புறம் மோட் டார் சைக்கிள் மோதியது.

இதில் பெரியசாமி மற்றும் முன்னால் அமர்ந்து இருந்த குழந்தை மிதுன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதில் சிறிதுநேரத்தில் சம்பவ இடத்திலேயே குழந்தை மிதுன் பரிதாபமாக இறந்தான்.

பலத்த காயமடைந்த பெரியசாமி மற்றும் ரோகி ணியை அக்கம்பக்கத் தினர் மீட்டு காவேரிப் பட்டணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெரியசாமி இறந்தார். இந்த விபத்து பற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!