11-ம் வகுப்பு மாணவியை கூட்டாக சீரழித்த கொடுமை – விசாரணையில் பகீர்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 11-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அண்ணன் உள்பட 3 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஈச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி தாய்-தந்தையை இழந்த நிலையில் தனது பெரியம்மா ஆதரவில் வளர்ந்து வருகிறார்.

இவர் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். இந்த மாணவிக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

கை-கால்களில் வலி ஏற்படவே வேதனையால் அலறி துடித்தார். உடனே அந்த மாணவியை அவரது உறவினர்கள் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

அப்போது அந்த மாணவி வயிறு பெரிதாக இருந்ததால் டாக்டர்களுக்கு சந்தேகம் எழுந்தது. உடனே டாக்டர்கள் அந்த மாணவியை பரிசோதித்தனர்.

அப்போது அந்த மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அந்த மாணவியிடம் விசாரித்தனர்.

அப்போது தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து எடுத்துக் கூறினார். இது தொடர்பாக செஞ்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது. மாணவியின் பெரியம்மா மகன் மோகன் (வயது 32), அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (80), இளையராஜா (28) ஆகியோர் அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது அடிக்கடி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இதனால் அந்த மாணவி கர்ப்பமாகி உள்ளார்.

மேற்கண்டவை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

கைதான 3 பேரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மாணவியிடம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா நேரில் விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தில் வேறு யாராவது ஈடுபட்டுள்ளார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!