நீரில் மூழ்கி தத்தளித்த சிறுமியை காப்பாற்றி உயிரை விட்ட நர்சிங் மாணவி!

சிறுமியை காப்பாற்றி விட்டு தன்னுயிரை நீத்த நர்சிங் மாணவியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், வளநாட்டை அடுத்த ஸ்ரீரங்கம்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் போதும்பொண்ணு (வயது 19). 12-ம் வகுப்பு முடித்த இவர், தற்போது பி.எஸ்சி. நர்சிங் சேர்ந்துள்ளார். நேற்று அந்த பகுதியில் உள்ள குளத்தில் தன்னுடைய தோழிகளுடன் போதும்பொண்ணு குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அதே குளத்தில் குளித்துக்கொண்டிருந்த 13 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கியதை கண்ட போதும்பொண்ணு உடனே அந்த சிறுமியை காப்பாற்ற முயன்றார். அப்போது நீரில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றி வெளியே தள்ளிய போதும்பொண்ணு தான் வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கினார். உடனே, தோழிகள் கூக்குரலிடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து நீரில் மூழ்கிய போதும்பொண்ணை மீட்டு வளநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அப்பெண் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

சிறுமியை காப்பாற்றி விட்டு தன்னுயிரை நீத்த நர்சிங் மாணவியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!