கொரோனா 3வது அலையில் பாதிக்கப்பட்ட சினிமா பிரபலங்கள்!

கொரோனா 3வது அலையில் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது மூன்றாவது அலையின்போதும் சினிமா பிரபலங்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை மீனா மற்றும் அவரது குழந்தை நைனிகா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நடிகைகள் திரிஷா, லட்சுமி மஞ்சு, செரீன் ஆகியோரும், நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், சத்யராஜ், இயக்குனர் பிரியதர்ஷன், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!