சாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மயிலை காப்பாற்றிய போலீசார்…!

உடனடி நடவடிக்கையால் மயில் காப்பாற்றப்பட்டதாக டெல்லி காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பறவையான மயில் உயிருக்கு போராடிய நிலையில் தலைநகர போலீசாரால் காப்பாற்றப்பட்டுள்ளது.

வடக்கு டெல்லியின் புராரி பகுதியில் மின்சாரம் தாக்கி சாலையில் கிடந்த மயில் ஒன்றை அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்துள்ளனர். உடனயாக அவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததை அடுத்து விரைந்து சென்ற போலீசார் மயிலை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சைக்கு பின்னர் அந்த மயிலின் உயிர் காப்பாற்றப்பட்டது. கடுமையான மற்றும் உடனடி முயற்சியால் மயில் காப்பற்றப்பட்டதாக புராரி காவல் ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!