விடுதியில் தங்கிப் படிக்க கட்டாயப்படுத்திய பெற்றோர்… சைதன்யா எடுத்த விபரீதமுடிவு!

கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்க சைதன்யாவிற்கு விருப்பம் இல்லாததால் வீட்டிலிருந்து படிப்பதாக தெரிவித்தார்.

திருப்பதி அடுத்த காளஹஸ்தி தொட்டம் பேடு மண்டலம் காராக்கொல்லு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகள் சைதன்யா (வயது 19). இவர் நெல்லூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

காளஹஸ்தியிலிருந்து தினமும் நெல்லூர் சென்று படித்து வருவதில் சிரமம் உள்ளதால் கல்லூரி விடுதியிலேயே தங்கி படிக்க வேண்டும் என அவரது பெற்றோர் சைதன்யாவிடம் கூறினர். ஆனால் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்க சைதன்யாவிற்கு விருப்பம் இல்லாததால் வீட்டிலிருந்து படிப்பதாக தெரிவித்தார்.

ஆனால் இந்த ஒரு வருடம் மட்டும் விடுதியில் தங்கி படிக்க வேண்டும் என அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தினர். இதையடுத்து புத்தாண்டுக்கு விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த சைதன்யா பெற்றோருடன் சேர்ந்து புத்தாண்டு கொண்டாடினார். நேற்று சைதன்யா காளஹஸ்தி சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது விடுமுறை முடிந்ததும் தன்னை மீண்டும் கல்லூரி விடுதியில் தங்கி படிக்க அனுப்பி விடுவார்களோ? என எண்ணி விரக்தி அடைந்துள்ளார்.

இதையடுத்து காளஹஸ்தி அருகே செல்லும் தெலுங்கு கங்கை திட்டம் ஆற்றங்கரைக்கு சென்று கரையில் தனது செல்போனை வைத்துவிட்டு ஆற்றில் குதித்து உள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த வழியாக சென்ற ஒருவர் ஆற்றங்கரையில் செல்போன் இருப்பதைக் கண்டு அந்த செல்போன் மூலம் சைதன்யாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து தொட்டம் பேடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆற்றில் மாணவியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று காலை தொட்டம் பேடு அருகே சைதன்யாவின் உடல் கரையோரம் ஒதுங்கியது. அதனை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இதுகுறித்து தொட்டம் பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!