சாலையில் குறுக்கே பாய்ந்த நாய் – டாக்டருக்கு நேர்ந்த சோகம்!

சாலையில் நாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கியில் இருந்து நிலைதடுமாறி விழுந்த டாக்டர் பலியனார்.



திருவட்டார் அருகே உள்ள ஆற்றூர் பறம்புவிளையை சேர்ந்தவர் எட்வின் ஜேக்கப் நேசராஜ் (வயது 38). இவருக்கு மோனிகா ஸ்டார்(29) என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
எட்வின் ஜேக்கப் நேசராஜ் கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வந்தார். இதனால் அவர், அங்கு குடும்பத்துடன் வசித்து வந்தார்.


நாய் பாய்ந்தது
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை உறவினர்களுடன் கொண்டாடுவதற்காக எட்வின் ஜேக்கப் நேசராஜ் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்திருந்தார். கடந்த 24-ந்தேதி ஆற்றூர் சந்திப்பில் உள்ள ஒரு கடையில் உணவு பொருட்கள் வாங்க மோட்டார் சைக்களில் சென்று கொண்டிருந்தார்.


அப்போது, மங்களாநடை பகுதியில் சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஒன்று பாய்ந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த எட்வின் ஜேக்கப் நேசராஜ் பிரேக்கை பிடித்தார். இதில், நிலை தடுமாறி கீேழ விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.


பலி
உடனே, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மறுநாள் தலைவலி ஏற்பட்டதால் மீண்டும் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று எட்வின் ஜேக்கப் நேசராஜ் பரிதாபமாக இறந்தார்.


இதுகுறித்து அவரது மனைவி மோனிகா ஸ்டார் கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் வந்த டாக்டர் விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!