அடிக்கடி செல்போனை யூஸ் பண்ணின +2 பள்ளி மாணவி… கண்டித்த பெற்றோர் – பின் நடந்த விபரீதம்!

வேடசந்தூர் அருகே செல்போனை பயன்படுத்தியதை பெற்றோர்கள் கண்டித்ததால் +2 பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள காசிபாளையத்தைச் சேர்ந்த கொத்தனார் சுப்பிரமணி – முருகேஸ்வரி தம்பதியின் மகள் சுதா(17) இவர் இதே ஊரில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் +2 படித்து வருகிறார்.

சுதா அடிக்கடி செல்போனை பயன்படுத்தி வருவாராம் இதை பலமுறை பெற்றோர்கள் கண்டித்துள்ளார்கள்.

நேற்று முன்தினம் காலை பெற்றோர்கள் சுதாவை மீண்டும் கண்டித்துள்ளனர். பிறகு சுப்பிரமணி கட்டிட வேலைக்கும் அவரது மனைவி முருகேஸ்வரி கூலி வேலைக்கும் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியபோது வீட்டில் மின்விசிறி மாட்டும் கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு சுதா இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் கூம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பள்ளி மாணவி சுதாவின் உடலை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சக மாணவ, மாணவிகளை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!