நடுரோட்டில் பெண்ணுக்கு 2 வது கணவர் செய்த வெறிச்செயல்!

பெங்களூருவில் சொத்து தகராறில் நடுரோட்டில் வாளால் சரமாரியாக வெட்டி பெண் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது 2-வது கணவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

கணவரை பிரிந்தவர்

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஜிகனியை சேர்ந்தவர் அர்ச்சனா ரெட்டி (வயது 40). இவருக்கு திருமணம் முடிந்து கணவர், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக அர்ச்சனா ரெட்டி தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் அர்ச்சனா ரெட்டிக்கும், நவீன் குமார் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர்.

சொத்து தகராறு

இந்த நிலையில் ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணாவில் அர்ச்சனா ரெட்டிக்கு ஏராளமான சொத்துகள் உள்ளது. அந்த சொத்துகளில் பாதியை தனக்கு பிரித்து தர வேண்டும் என்று அர்ச்சனா ரெட்டியிடம், நவீன்குமார் கேட்டதாக தெரிகிறது.

ஆனால் இதற்கு அர்ச்சனா ரெட்டி மறுத்து விட்டார். இதுதொடர்பாக நவீன்குமாருக்கும், அர்ச்சனா ரெட்டிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.

ஓட்டுப்போட்டு வந்தார்

இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அர்ச்சனா ரெட்டி நவீன்குமாரை பிரிந்தார். பின்னர் தனது மகனுடன் பெல்லந்தூரில் வசித்து வந்தார். ஆனாலும் சொத்து விஷயத்தில் அர்ச்சனா ரெட்டியிடம், நவீன்குமார் அடிக்கடி தகராறு செய்து வந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த ஜிகனியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க அர்ச்சனா ரெட்டி காரில் பெல்லந்தூரில் இருந்த ஜிகனிக்கு சென்றார். தேர்தலில் வாக்களித்துவிட்டு பெல்லந்தூருக்கு அர்ச்சனா ரெட்டி சென்றார்.

வெட்டிக்கொலை

காரை டிரைவர் பிரமோத் ஓட்டினார். காரில் அர்ச்சனா ரெட்டியின் மகனும் இருந்தார். எலெக்ட்ரானிக் சிட்டி அருகே ஒசரோடு ஜங்ஷன் பகுதியில் வந்த போது காரை வழிமறித்த நவீன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அர்ச்சனா ரெட்டியை காரில் இருந்து வெளியே பிடித்து இழுத்தனர்.

பின்னர் நடுரோட்டில் அர்ச்சனா ரெட்டிைய தள்ளிவிட்டு நவீன்குமார், அவரது நண்பரும் வாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த வெட்டு காயம் அடைந்த அர்ச்சனா ரெட்டி பரிதாபமாக இறந்தார். பின்னர் நவீன்குமார், அவரது நண்பர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

வலைவீச்சு

இதுபற்றி தகவல் அறிந்ததும் எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அர்ச்சனா ரெட்டியின் உடலை பிரேத பரிசோதனை்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சொத்து தகராறில் அர்ச்சனா ரெட்டியை நவீன்குமார், அவரது நண்பர் சேர்ந்து வாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

இந்த கொலை சம்பவம் குறித்து எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தலைமறைவாகிவிட்ட நவீன்குமார், அவரது நண்பர்கள் 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

வீடியோ வைரல்

இந்த நிலையில் அர்ச்சனா ரெட்டி கொலை செய்யப்பட்ட காட்சிகளை யாரோ ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி காண்போரின் நெஞ்சை பதறவைக்கிறது. நடுரோட்டில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!