தீவிரவாதிகளை தோற்கடிக்கும் வரை அமெரிக்கா ஓயாது – டிரம்ப் அதிரடி!


அமெரிக்காவின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த கூட்டுக்குழு கூட்டத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் முறையாக உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்படும் வரை அமெரிக்கா தொடர்ந்து போரிடும். பயங்கரவாதிகள் வெறும் குற்றவாளிகள் மட்டுமல்ல, சட்டவிரோத எதிரி போர் படையினர்.

சுதந்திரத்திற்காக தைரியமாக போராடும் ஈரான் மக்களுக்கு அமெரிக்கா துணை நிற்கும். வடகொரியாவை விட எந்த நாட்டின் அரசாங்கமும் மக்களை கொடூரமாக அடக்கி வைத்ததில்லை.

மக்களின் நன்மைக்காக கருத்து வேறுபாடுகளை மறந்து எதிர்க்கட்சிகள் இணைந்து பணியாற்ற வேண்டும். அனைத்து மக்களுக்காக அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றிக் காட்டுவேன். எனது நிர்வாகம் 20.40 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளது.

சீனாவும் ரஷியாவும் அமெரிக்காவின் மதிப்புகளுக்கு சவால்களாக விளங்குகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!