10-ம் வகுப்பு மாணவன் விபரீதமுடிவு… அதிர வைத்த காரணம்!

10-ம் வகுப்பு மாணவன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் ஏரிக்கரையை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் தீபக்குமார் (வயது 16). அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக பள்ளிக்கு சரிவர செல்லாததால் அவரை பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது.

அத்துடன் அடிக்கடி தலை வலியால் அவதிப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த மாணவன் தீபக்குமார், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!