இப்ப தான் ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடையும்- ஜெ.தீபா பேட்டி!

வேதா இல்ல சாவியை பெற்றுக்கொண்டதன் மூலம் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடையும் என தீபா கூறியுள்ளார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயல‌லிதாவின் வேதா இல்ல சாவி தீபா, தீபக் ஆகியோரிடம் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி சாவியை ஒப்படைத்தார். இதனையடுத்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

என் வாழ்வில் இப்படியொரு திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை. வீட்டை மீட்பதற்கு என்னால் முடிந்த அளவு முயற்சி செய்தேன். வேதா இல்லத்தில் வசிக்க முடிவு செய்துள்ளோம். வேதா இல்ல சாவியை பெற்றுக்கொண்டதன் மூலம் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடையும் என்றார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!