உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா… பாகிஸ்தான் நடிகை குஷ்பு செய்த கேவலம்!

உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து சக நடிகைகளின் நிர்வாண காட்சிகளை வீடியோ எடுத்த நடிகை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சினிமா நடிகை குஷ்பு. இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து உள்ளார். பல மேடை நிகழ்ச்சிகளிலும் நடித்தி வருகிறார். இந்நிலையில், இவர் நிகழ்ச்சி ஒன்றில் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து சக நடிகைகளின் நிர்வாண காட்சிகளை வீடியோ எடுத்ததாக நடிகை குஷ்பு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

லாகூரில் உள்ள தியேட்டரில் நடைபெற்ற மேடை நிகழ்ச்சியில் குஷ்பு தனது சக நடிகைகளுடன் பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சிக்கு முன்னர் குஷ்புவுக்கும் சக நடிகைகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, சக நடிகைகள் குஷ்புவை நிகழ்ச்சியில் பங்கேற்கவிடாமல் தடுத்து வெளியேற்றினர்.

இதனால், ஆத்திரமடைந்த குஷ்பு தியேட்டர் ஊழியர் ஒருவருக்கு 1 லட்ச ரூபாய் பணம் கொடுத்து உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா பொறுத்தியுள்ளார். கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற சக நடிகைகள் உடைமாற்றும் அறையில் உடைகளை மாற்றுவதை அந்த ரகசிய கேமரா மூலம் பதிவு செய்துள்ளார். பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை பயன்படுத்தி சக நடிகைகளை குஷ்பு மிரட்டியுள்ளார்.

மேலும், ரகசிய கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட சக நடிகைகளின் நிர்வாண வீடியோக்களையும் குஷ்பு சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலானது.

இதனை தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடிகை குஷ்புவுக்கு உடந்தையாக இருந்த கஷிபா சென் என்பவரை கைது செய்தானர்.

ஆனால், தன்னை கைது செய்ய குஷ்பு கோர்ட்டில் தடை வாங்கியுள்ளதால் அவரை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. குஷ்புவை வரும் 21-ம் தேதி வரை கைது செய்ய கோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்த தடை நீங்கிய பின்னரே குஷ்புவை போலீசார் கைது செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!