தமிழக முன்னாள் கவர்னர் ரோசய்யா காலமானார்

தமிழக கவர்னராக ரோசய்யா 2011 முதல் 2016 வரை பணியாற்றி உள்ளார்.

முன்னாள் தமிழக கவர்னரும், முன்னாள் ஆந்திர மாநில முதலமைச்சருமான ரோசய்யா (88) காலமானார்.

ஆந்திர மாநில முதலமைச்சராக ரோசய்யா 2009-ம் ஆண்டு முதல் 2010 வரை பதவி வகித்துள்ளார். தமிழக கவர்னராக ரோசய்யா 2011 முதல் 2016 வரை பணியாற்றி உள்ளார்.

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரோசய்யா காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பியாக இருந்தவர்.

வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஐதராபாத்தில் ரோசய்யா காலமானார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!