தங்கையை வளைகாப்பில் கொல்ல வந்த அண்ணன்.. பகீர் சம்பவம்!

காதல் திருமணம் செய்துகொண்ட பெண்ணின், வளைகாப்பு விழா அழைப்பிதழில், தாய் தந்தையர் பெயர் அச்சிட்டதால், ஆத்திரமடைந்த பெண்ணின் அண்ணன் கத்தியுடன் விழாவில் புகுந்து தாக்கியதால் ஒருவருக்கு கத்தி குத்து.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பழைய நெய்வேலி கிராமத்தை சேர்ந்த கலைமணி – பானுமதி என்பவர்களின் மகன் கர்ணன். அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை -தமிழ்ச்செல்வி என்பவரின் மகள் கௌசிகா. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும், பல வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு, பெற்றோர்களை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

காதல் திருமணம் செய்து கொண்ட பின்பு, கௌசிகா கர்ப்பமான நிலையில், அவருக்கு வளைகாப்பு விழா நடத்துவதற்காக, அவரது கணவர் மற்றும் அவரது உறவினர்கள் அழைப்பிதழ் அச்சிட்டு ஏற்பாடு செய்துள்ளனர். அழைப்பிதழில் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொண்ட கௌசிகா, தனது தாய் தந்தை மற்றும் அண்ணன் அண்ணியின் பெயரை பத்திரிக்கையில் அச்சடித்து உள்ளார். அதனைத் தொடர்ந்து, இன்று விருத்தாசலத்தில் உள்ள மேத்தா திருமண மண்டபத்தில் வளைகாப்பு விழா நடைபெற்று கொண்டிருந்தது.


அப்போது விழா நடைபெறும் தனியார் மண்டபத்திற்குள், கத்தியுடன் நுழைந்த பெண்ணின் அண்ணன் வினோத் என்பவர் கர்ணன் மற்றும் கெளசிகா-வை கொலை செய்ய முற்பட்டார். அப்போது மண்டபத்திற்குள் இருந்த உறவினர்கள் அவரை பிடித்து, கத்தியை அபகரிக்க முயற்சித்தனர்.

அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தள்ளு முள்ளில், கர்ணனின் மாமனான சிலம்பரசனின் வயிற்றில் கத்தி பாய்ந்துள்ளது. மேலும் கர்ணனுக்கும், அவரது மனைவி கௌசிகா -விற்கு பலத்த அடி ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் காவல் துறையினர் வினோத் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.- source: samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!