காதலியை மிரட்ட துப்பாக்கியை நெற்றியில் வைத்த வாலிபர் மரணம்… நடந்தது என்ன?


பீகார் மாநிலம் பாட்னாவில், காதலியுடன் வீடியோ சாட்டிங்கில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தார். ஆகாஷ் குமார் என்ற அந்த 19 வயது இளைஞரின் காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் மனவருத்தத்தில் இருந்த அவர், காதலிக்கு வாட்ஸ் ஆப்பில் வீடியோ அழைப்பு மேற்கொண்டு பேசியுள்ளார். காதலி தன்னை விட்டு போய்விடக் கூடாது என்ற நோக்கில் மிரட்ட எண்ணிய அவர், துப்பாக்கி தோட்டாக்களை அகற்றி விட்டு தனது நெற்றியில் வைத்து மிரட்டியுள்ளார்.

எனினும் ஒரு தோட்டா துப்பாக்கியிலேயே இருந்ததை அவர் கவனிக்கவில்லை. காதலியை மிரட்டுவதற்காக விசையை அழுத்தியதும் துப்பாக்கி தோட்டா பாயந்து அந்த இளைஞர் உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் மீது ஆகாஷின் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர். – Source: tamil.eenaduindia.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!